சிலாங்கூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய ஊடக மன்றம் தொடர்பான சட்ட மசோதா தற்போது நடைபெற்றுவரும் மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, MPC எனப்படும் மலேசிய உற்பத்தித்திறன் கூட்டுறவு நிறுவனம், இச்சட்ட மசோதாவை விதிமுறை தாக்க பகுப்பாய்வு, RIA செயல்முறைக்கு உட்படுத்துவதற்கு அனுப்ப விண்ணப்பித்ததால், அதனை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
நாட்டில் ஊடகவியல் துறையை மேம்படுத்துவதற்கு செய்தி நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துவதோடு, செய்திகள் பொறுப்புடன் வெளியிடப்படுவதையும் மலேசிய ஊடக மன்றம் உறுதிப்படுத்தும்.
இதனிடையே, இணைய பாதுகாப்பு குறித்த சட்டமசோதா, இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)