உலகம்

பெஷாவாரில் தொழிற்சாலை தீ விபத்து

28/10/2024 07:26 PM

பெஷாவர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- பாகிஸ்தான், பெஷாவரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் 20 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இயந்திரத்தில் ஏற்பட்ட மின் இணைப்புக் கோளாரால், இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணிகளில் பல மாவட்டங்களைச் சேர்ந்த, 20 வாகனங்களும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், தொழிற்சாலையில் பணிபுரியும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இத்தீச் சம்பவம் தொடர்பில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்களால் தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)