கோலாலம்பூர், 26 மே (பெர்னாமா) -- இன்று தொடங்கிய 46-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் இன்று காலை கோலாலம்பூர் மாநாட்டு மையம் KLCC வந்தடைந்தனர்.
அவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காலை 8:15 மணியளவில் வரவேற்றார்.
திமோர்-லெஸ்டே தொடங்கி ஆசியான் நாடுகளான தாய்லாந்து, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், கம்போடியா மற்றும் புருணை ஆகிய நாடுகளின் தலைவர்களும் கட்டம் கட்டமாக மாநாட்டு மையம் வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் பல்வேறு அமைச்சுகள் உட்பட அனைத்து தரப்பினரும் மேற்கொண்ட தயாரிப்புகள் மற்றும் நுணுக்கமான முயற்சிகளில் தாம் திருப்தி அடைவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
இதில் வெளியுறவு அமைச்சு, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சு பொருளாதார அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளின் ஏற்பாடுகள் அடங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)