கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- காற்று தூய்மைக்கேடு குறியீடு 200-ஐ தாண்டும்போது இல்லிருப்பு கற்றல் கற்பித்தல், பி.டி.பி.ஆர் செயல்படுத்தப்படும்.
இதன் தொடர்பில், கல்வி அமைச்சு ஏற்கனவே வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளதோடு, அவை அனைத்துப் பள்ளிகளுக்கும் நடப்பில் உள்ள செயல்பாட்டு தர விதிமுறைப்படி பொருந்தும் என்று கல்வி அமைச்சர், ஃபட்லினா சிடேக் கூறினார்.
''இந்தப் புகைமூட்டம் தொடர்பான எந்தவொரு முடிவுகளும் சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே எங்கள் வழிகாட்டுதல்கள் படி 100-க்கும் அதிகமாக இருந்தால் (காற்றுத்தூய்மைக்கேடு குறியீடு), வெளிப்புற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது. 200-க்கு மேல் இருந்தால் பி.டி.பி.ஆர். அதாவது இணையம் வழி கற்றல் கற்பித்தல் நடைபெறும்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான இலக்கவியல் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப விருது விழாவிற்குப் பிறகு அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)