ஸ்கூடாய், 23 ஜூன் (பெர்னாமா) -- இன்று காலை, R&R ஓய்வு பகுதிக்கு அடுத்து, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், தெற்கு நோக்கி செல்லும் சாலையின் 31.9-வது கிலோமீட்டரில், ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
காலை மணி 9.02-க்கு இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும், கூலாய் மற்றும் பண்டார் பாரு கூலாய் நிலையங்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூலாய் மீட்பு நடவடிக்கை பிரிவின் கமண்டர் கைரில் முஹமட் அட்சாமி தெரிவித்தார்.
இவ்விபத்தில் சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
கொள்கலன் லாரி, இரும்பு வேலிகளை ஏற்றிச் சென்ற 40 அடி treler, Toyota Hilux, Nissan Vanette வேன், பளிங்கு கற்களை ஏற்றிச் சென்ற 10 டன் Nissan லாரி, மற்றும் ஒரு டன் லாரி ஆகியவை விபத்துக்குள்ளாகின.
30 வயதான டிரெய்லர் ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொயோதா ஹைலக்ஸ் வாகனம் சுமார் 90 விழுக்காடு எரிந்த நிலையில், நிஸ்சான் வானெட் வேனும் அதே அளவு சேதம் அடைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)