பொது

வீ.ஈ.பி-ஐ அமல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரம்

25/06/2024 06:54 PM

புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) -- வரும் அக்டோபர் முதலாம் தேதி, வீ.ஈ.பி எனப்படும் வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட் அமல்படுத்தவிருப்பதால், அந்நிய நாட்டு வாகனங்கள் மலேசியாவில் செயல்படுத்தப்படும் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்,

அதனை அமல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளதாகவும், அதனை ஒருபோதும் நிறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, சிங்கப்பூரில் இருந்து அடிக்கடி நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு ஓட்டுநர்கள், சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்தோணி லோக் எச்சரித்தார்.

பழைய வாகனத்தைப் பயன்படுத்தும் சில சிங்கப்பூர் வாகனமோட்டிகள், விஇபி-இல் தங்களின் வாகனத்தைப் பதிவு செய்வதில் சிக்கலை எதிர்நோக்குவதாக கூறியிருப்பதற்கு அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)