பொது

மடானி பொருளாதார கட்டமைப்பில் அடையவிரும்பும் அம்சத்தில் மடானி வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும்

09/07/2024 06:05 PM

புத்ராஜெயா, 9 ஜூலை (பெர்னாமா) -- மடானி பொருளாதார கட்டமைப்பில் அடையவிரும்பும் அம்சத்தில் 2025ஆம் ஆண்டு மடானி வரவு செலவுத் திட்டம் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

அதன் பொருட்டு, நாடு மேலும் அதிகமான செல்வத்தை அடைய, உச்சவரம்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அதாவது பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த இலக்கை அடைவதற்கான உச்சவரம்பை அதிகரிப்பதைத் தவிர்த்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படை அம்சத்தை மேம்படுத்துவது முதன்மை சவாலாக உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று, புத்ராஜெயாவில், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றும்போது அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)