பொது

மனிதவள அமைச்சின் கட்டிடத்திற்கு எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் வருகை

09/07/2024 06:23 PM

புத்ராஜெயா, 9 ஜூலை (பெர்னாமா) -- இன்று புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சின் கட்டிடத்திற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி,ஆர்.எம்-இன் நான்கு அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர்.

எச்.ஆர்.டி கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவன விவகாரம் தொடர்பான, விசாரணை சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பெறுவதற்காக அந்த அதிகாரிகள் குழு இன்று காலை மணி 11.20-க்கு அங்கு வருகை புரிந்தது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பிரிவு இருக்கும் 7ஆவது மாடிக்கு அதிகாரிகள் குழு சென்றது ஊடகங்கள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த நான்கு அதிகாரிகளும் எச்.ஆர்.டி கோர்ப் வழக்கு தொடர்பானது என்று நம்பப்படும் சில ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு கட்டிடத்திலிருந்து வெளியே வருவதைக் காண முடிந்தது.

அதிகாரிகளில் ஒருவர் ஆவணங்களைப் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்றும் மதியம் மீண்டும் வரவிருப்பதாகவும் கட்டிடத்திலிருந்து வெளியேறும் போது தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)