உலகம்

உத்தர பிரதேசத்தில் பேருந்து பால் லாரி மீது மோதல் - 18 பேர் பலி

10/07/2024 07:35 PM

உத்தர பிரதேசம், 10 ஜூலை (பெர்னாமா) -- வட இந்தியாவில், இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று பால் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 19 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

உத்தர பிரதேசத்தின் நிகழ்ந்த இவ்விபவத்தில் காயமடைந்தவர்களை, அங்கிருந்த கிராம மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பேருந்து பிஹார் மாநிலத்தில் இருந்து புது டெல்லி நோக்கி பயணிக்கும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் போலீஸ் சுப்ரிடெண்டன் கண்காணிப்பாளர் சித்தார்த் சங்கர் தெரிவித்தார்.

உலகிலேயே, அதிக மரண விபத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ள நாடுகளில் இந்தியாவும் அடங்கும்.

அந்நாட்டில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விபத்தினால் உயிரிழப்பதோடு காயத்திற்கும் ஆளாகின்றனர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்துவது, மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் பழமையான வாகனங்கள் ஆகியவை பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)