நியூ ஜெர்சி, 10 ஜூலை (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு கோப்பா கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு அர்ஜெண்டினா தேர்வாகியது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அர்ஜெண்டினா கனடாவுடன் மோதியது.
இவ்வாட்டத்தில், 22-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அர்ஜெண்டினா முன்னணி வகிக்கத் தொடங்கியது.
முதல் பாதி ஆட்டம், அர்ஜெண்டினாவுக்கு சாதகமாக முடிய, இரண்டாம் பாதி ஆட்டத்தில் கனடா பல முயற்சிகளை மேற்கொண்டது.
இருப்பினும், 51-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெசி இரண்டாவது கோலை அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா உருகுவே அல்லது கொலம்பியாவுடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)