வட கரோலினா, 11 ஜூலை (பெர்னாமா) -- 10 விளையாட்டாளர்களுடன் விளையாடினாலும் கொலம்பியா, உருகுவே அணியை 1-0 என்ற கோலில் தோற்கடித்து கோப்பா கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.
சுமார் 75 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்வாட்டம் விருவிருப்பாகத் தொடங்கியது.
கோல் அடிப்பதில் இரு அணிகளுமே முயற்சிகளை மேற்கொண்டன.
அதன் பயனாக, 39-வது நிமிடத்தில், கொலம்பியா தனது வெற்றி கோலை அடித்து உருகுவே பயணத்தை முடித்து வைத்தது.
இந்த வெற்றி, கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பை கொலம்பியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)