உலகம்

வடமேற்கு பாகிஸ்தானில் வெவ்வேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள்

17/07/2024 07:28 PM

பாகிஸ்தான், 17 ஜூலை (பெர்னாமா) -- வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோரில், ஐந்து பொதுமக்கள், 10 ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் 13 பேர் என்று சந்தேகிக்கப்படுவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் குழு ஒன்று அப்பகுதியின் சுவர் மீது ஒரு வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதியதில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலால், சம்பந்தப்பட்ட சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதன் அருகிலுள்ள உள்கட்டமைப்பு சேதமடைந்ததால் அந்த எட்டு வீரர்களும் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)