பொது

பூர்வக்குடி மக்களுக்கும் தரமான சுகாதார சேவை - சுகாதார அமைச்சு உறுதி

23/07/2024 06:44 PM

கோம்பாக், 23 ஜூலை (பெர்னாமா) -- அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பூர்வக்குடி மக்களும் தரமான சுகாதார சேவை பெறுவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து உறுதி செய்யும் என்று, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் தெரிவித்திருக்கிறார்.

''எனவே, இந்த கோம்பாக் பூர்வக்குடி மருத்துவமனை, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார வசதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இதற்கு நிச்சயமாக அமைச்சு, தனியார், மூன்றாம் தரப்பு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படும்,'' என்றார் அவர்.

இன்று கோம்பாக் பூர்வக்குடி மருத்துவமனைக்கு பேரரசியார் ராஜா சாரித் சொஃபியா அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார்.

இதனை முன்னிட்டு வழங்கிய உரையில், டாக்டர் சுல்கிஃப்ளி அவ்வாறு கூறினார்.

17-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமரும் சடங்கின் ஒரு பகுதியாக ராஜா சாரித் சொஃபியாவின் இந்த வருகை அமைந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)