உலகம்

எத்தியோப்பியா நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 229-ஆக உயர்வு

24/07/2024 07:29 PM

அட்டிஸ் அபாபா, 24 ஜூலை (பெர்னாமா) -- தென் எத்தியோப்பியா-வில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229-ஆக அதிகரித்துள்ள வேளையில், மீட்பு நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.

55 பேராக இருந்து மரண எண்ணிக்கை, மீட்கப்பட்டவர்களிடையே ஏற்பட்ட உயிரிழப்பினால் அதிகரித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழையின் காரணமாக எத்தியோப்பியா-வில் உள்ள கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி மாவட்டத்தில் இப்பேரிடர் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

இச்சம்பவத்தில் இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் வேளையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக, மத்திய பேரிடர் தடுப்பு பணிக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர், அபி அஹ்மட் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)