உலகம்

எத்தியோப்பியா: நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257-ஆக உயர்வு

27/07/2024 07:05 PM

கெஞ்சோ, 27 ஜூலை (பெர்னாமா) -- எத்தியோப்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு எத்தியோப்பியாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் அதிகமானோர் புதையுண்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழையினால் ஏற்பட்ட சகதி வெள்ளத்தினால் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

இதுவரை அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடராக இது கருதப்படுகிறது.

நிலச்சரிவு மீண்டும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுவதால் சுமார் 15,000 பேர் பாதுக்காப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]