உலகம்

பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பில் வலுக்கும் போராட்டங்கள்

16/08/2024 06:50 PM

கொல்கத்தா, 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியா, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பில் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல நகரங்களில் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பாதுகாப்பான பணிச்சூழலைக் கோரி போராடிவரும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு, இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள R.G. Kar மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிகமானோர் நுழைந்து வாகனங்களையும் நோயாளிகளின் அறைகளையும் தாக்கியதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலுக்கு காரணமானவர்களை போலீஸ் இன்னும் அடையாளம் காணவில்லை.

அக்கல்லூரியில் நிகழ்ந்த கலவரத்தில் பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)