பொது

தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு உழைத்தவர்களுக்கு பிரதமரும் அமைச்சரவையினரும் நன்றி நவில்ந்தனர்

03/09/2024 06:39 PM

புத்ராஜெயா, 03 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேசிய தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிமும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

கொண்டாட்டத்திற்கான அனைத்து தயார்நிலை பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளை செயல்படுத்திய தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சிற்கும் பிரதமர் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதாக ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான  ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அனைத்து ஊழியர்களும் காட்டிய அர்ப்பணிப்பு குறிப்பாக சிறப்பான படைப்பை வெளிப்படுத்திய 'HUMAN GRAPHIC' குழுவிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்ததாகவும் ஃபஹ்மி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)