பொது

மக்கோத்தாவில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கு விரைந்து பேச்சுவார்த்தை

25/09/2024 08:01 PM

குளுவாங், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் உள்ள சில முக்கியமான இடங்களில் வெள்ளப் பிரச்சனை தொடர்பில், பொதுப்பணி துறை, நீர்பாசன மற்றும் வடிகால் துறை, குளுவாங் மாவட்ட நில அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவிருப்பதாக பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

அம்மாவட்டத்தில், வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்கான முழுமையான விண்ணப்பத்தை அனுப்ப இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த விண்ணப்பம் குறித்த ஆவணத்தை வேட்புமனு தாக்கல் தினத்திற்கு முன்னர் தாம் பெற்றதாக கூறிய அவர், அதைத் தொடர்ந்து சில அமைச்சுகளுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)