கோலா நெராங், 28 செப்டம்பர் (பெர்னாமா) -- சனிக்கிழமை காலை மணி 8.29 அளவில் கெடா, கோலா நெராங், கம்போங் தஞ்சோங் கீரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், தாயும் மகனும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
46 வயதான சல்மா மாட் சைன் மற்றும் அவரின் 19 வயதான மாற்றுத் திறனாளி மகனான முஹமட் ரொஸ்மான் ரொஹாய்டி ஆகியோரை தேடி மீட்கும் பணிகள் தொடரப்பட்டுள்ளன.
கோலா நெராங், பொகோக் சேனா, சுங்கை பட்டாணி மற்றும் ஜித்ரா தீயணப்பு மற்றும் மீட்புத் துறையின் படகுகள், போலீஸ் மற்றும் மலேசிய பொது பாதுகாப்புப் படையின் உதவியுடன் தேடல் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையினால், அருகிலுள்ள சுங்கை பாடாங் தெராப் நிரம்பியதால் அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)