உலகம்

சீன பேரங்காடியில் கத்திக்குத்து சம்பவம்; 3 பேர் பலி

01/10/2024 08:05 PM

ஷங்ஹாய் , 01 அக்டோபர் (பெர்னாமா) --  சீனாவின் ஷங்ஹாய் நகரில் உள்ள பேரங்காடியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.

15 பேர் காயமுற்றனர்.

சீனாவின் 75-வது ஆண்டு நிறைவுக்கு முந்திய நாளான நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

இந்த தாக்குதல் நடத்தியவர், லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் அவர்  தனது தனிப்பட்ட நிதிச் சிக்கலால் ஏற்பட்ட கோபத்தைக் கொட்டித் தீர்க்க ஷங்ஹாய் வரை பயணம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த மாதம்  சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10 வயது ஜப்பானிய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு மாண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)