விளையாட்டு

உலக தொடர் பூப்பந்து போட்டி; சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த சி ஜியா இலக்கு

03/10/2024 07:18 PM

கோலாலம்பூர், 03 அக்டோபர் (பெர்னாமா) -- எதிர்வரும் டிசம்பரில், சீனா, ஹங்சோவில் நடைபெறவிருக்கும் 2024-ஆம் ஆண்டின் உலக தொடர் பூப்பந்து போட்டிகளின் இறுதி சுற்றில் தகுதி பெற ஐரோப்பாவில் நடைபெறும் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாட்டின் ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர் லீ சி ஜியா இலக்கு கொண்டுள்ளார்.

அப்போட்டியில் விளையாடுவதற்கான கனவை நினைவாக்க ஐரோப்பா போட்டியில் தமது உடல் ஆரோக்கியத்தை எப்போதும் பராமரிப்பதாக 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிப்பிக் போட்டியின் வெண்கலம் பதக்க வெற்றியாளரான அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13ஆம் தேதி வரை ஃபின்லாந்தில் நடைபெறும் ஆர்டிக் பொது பூப்பந்து போட்டி மற்றும் அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் டென்மார்க் பொது பூப்பந்து போட்டி உட்பட பல போட்டிகளில் பங்கேற்று சிறந்த அடைவுநிலைகளை லீ சி ஜியா பெற வேண்டும்.

தற்போது உலக அளவில் லீ சி ஜியா ஆறாம் இடத்தில் உள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]