பொது

ஒரு நாள் பயணம் மேற்கொண்டு பிரதமர் வங்காளதேசம் சென்றுள்ளார்

04/10/2024 06:44 PM

டாக்கா, 04 அக்டோபர் (பெர்னாமா) -- பாகிஸ்தானுக்கான தமது அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வங்காளதேசம் சென்றுள்ளார்.

மலேசிய நேரப்படி மாலை மணி 4-க்கு அவரை ஏற்றிச் சென்ற விமானம் டாக்காவில் உள்ள ஹஸ்ராத் ஷாஜாலல் (Hazrat Shahjalal) அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்க மூத்த ஆலோசகர் டாக்டர் முஹமாட் யுனூஸ் பிரதமரை வரவேற்றார்.

அன்வாருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையிலான தூதரக உறவுகளை வலுப்படுத்தவும்,  நட்புறவை வளர்க்கவும், நோபல் பரிசு பெற்ற முஹமாட் யுனூஸ் உடனான இருதரப்பு சந்திப்பில்  பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]