பொது

லெபனானிலிருந்து 4 மலேசியர்கள் நாடு திரும்பினர்

04/10/2024 07:35 PM

புத்ராஜெயா, 4 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று காலை லெபனானில் இருந்து நான்கு மலேசியர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏ வந்தடைந்ததை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

பெய்ரூட்டில் இருந்து அவர்கள் புறப்படுவதற்கு அங்கே செயல்படும் மலேசியத் தூதரகம் ஏற்பாடு செய்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி விஸ்மா புத்ரா கூறியது.

லெபனானில் வசிக்கும் மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

லெபனானில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் அமைச்சு கவனம் செலுத்தும்.

அங்குள்ள சூழ்நிலையைக் கண்காணித்து தேவையான உதவிகளை பெய்ரூடில் உள்ள மலேசியத் தூதரகம் வழங்கும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]