கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர் மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, SARA ஆகியவை அடுத்த ஆண்டிலும் தொடரப்படவிருக்கின்றன.
எனினும், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 1,000 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும் இவ்வாண்டு ஆயிரத்து 300 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதை பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டினார்.
இத்தொகையின் வழி, நாட்டிலுள்ள 90 லட்சம் பேர் அதாவது 60 விழுக்காட்டினர் பயன்பெறுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருமணமாகாதவர்கள் 600 ரிங்கிட் STR உதவித் தொகையைப் பெறவிருக்கின்றனர்.
அதேவேளையில், குடும்பங்களுக்கு 300 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் கடந்தாண்டில் வழங்கப்பட்ட 3,700 ரிங்கிட்டைக் காட்டிலும், இம்முறை 4,600 ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)