முனிக், 02 ஜூலை (பெர்னாமா) -- 2024 யூரோ காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு போர்த்துகல் தேர்வாகியது.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் கோல் இன்றி முடிவடைய, வெற்றியாளரைத் தீர்மானிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில், போர்த்துகல், ஸ்லோவேனியாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
முழு நேரம் ஆட்டம் கோல் இன்றி முடிவடைந்த நிலையில், கூடுதல் நேரத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை போர்த்துகல் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார்.
கூடுதல் நேரத்திலும் இரு குழுக்களும் கோல் இன்றி ஆட்டத்தை நிறைவு செய்ததால், ஆட்டம் பினால்டி வரை சென்றது.
அதனைப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துகல், மூன்று கோல்களை அடித்து ஸ்லோவேனியாவின் பயணத்தை முடித்து வைத்தது.
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டத்தில், போர்த்துகல் பிரான்சுடன் மோதவுள்ளது.
மற்றொரு ஆட்டத்தில், பிரான்ஸ் பெல்ஜியத்தை 1-0 என்ற கோலில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், பிரான்ஸ் தனது ஒரே வெற்றி கோலை அடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)