மாஸ்கோ, 06 ஜூலை (பெர்னாமா) -- போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உக்ரேன் தயாராக இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு பகுதிகளில் இருந்து உக்ரேன் தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற முந்தைய கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இருப்பினும், புதினின் அந்த கோரிக்கையை கீவ் மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்தன.
புதினின் அந்த கோரிக்கை, சொந்த நாட்டில் இருந்தே உக்ரேனை வெளியேறுமாறு கோருவதற்கு ஒப்பானது என்று கீவ் சாடியுள்ளது.
உக்ரேன் மீண்டும் வழுப்பெறும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைகளையும் ரஷ்யா ஆதரிக்காது என்று புதின் கூறியுள்ளார்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், புதின் அந்த தகவல்களை தெரிவித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]