உலகம்

ஹண்டிங்டன் கடற்கரையில் கத்திக் குத்து தாக்குதல்; இருவர் பலி

06/07/2024 07:44 PM

ஹண்டிங்டன், 06 ஜூலை (பெர்னாமா) -- தெற்கு கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரையில், ஜூலை 4-ஆம் தேதி நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பில், இரவு மணி 11.15 அளவில் ஹண்டிங்டன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு சிலர் காயமடைந்திருப்பதைக் கண்டனர்.

இரண்டு நபர்கள் உயிரிழந்த வேளையில், காயமடைந்த மூவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்,

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹண்டிங்டன் கடற்கரையின் குடியிருப்பு பகுதியில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் பங்கேற்ற வேளையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

காரில் வந்திறங்கிய நபர் ஒருவர், அக்கொண்டாடத்தில் திளைத்திருந்த ஆடவர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]