உலகம்

பராஸ் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து - 26 பேர் பலி

17/07/2024 08:29 PM

பெரு, 17 ஜூலை (பெர்னாமா) -- தென்மேற்கு பெருவின், அயாகுகோ வட்டாரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

இவ்விபத்தில் சுமார் 15 பேர் காயமடைந்ததாக போலீஸ் தரப்பு தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

கங்காலோ மாகாணத்தின் பராஸ் மாவட்டத்தில் உள்ள லாஸ் லிபர்டடோர்ஸ் நெடுஞ்சாலையில், சம்பந்தப்பட்ட பேருந்து சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.

லிமாவிலிருந்து அயாகுகோ நோக்கி பயணித்த சம்பந்தப்பட்ட அப்பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக அந்நாட்டின் தேசிய போலீஸ் படையின் சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் ஜானி ரோலண்டோ வால்டெர்ராமா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)