பொது

மாமன்னரின் ஆட்சியின் கீழ் சேவையாற்ற மேலவை உறுப்பினர்கள் தயார்

23/07/2024 05:51 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை, 17-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக அரியணை அமர்ந்த சுல்தான் இப்ராஹிமிற்கும் பேரரசியார் ராஜா சாரித் சொஃபியாவிற்கும் மேலவை இன்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

சுல்தான் இப்ராஹிமின் ஆட்சியின் கீழ், சேவையாற்றவும் விசுவாசத்தைச் செலுத்தவும் மேலவை உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக கூட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர், மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பெமீ அவாங் அலி பாசா தெரிவித்தார்.

''இறைவனின் அருளால் முழு ஆசியுடன் மாமன்னர் தம்பதியர் அரியணை அமர்ந்துள்ளனர். மாமன்னரின் நிர்வகிப்பின் கீழ், சேவையாற்றவும் விசுவாசம் செலுத்தவும் அனைத்து மேலவை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர்,'' என்றார் அவர்.

கடந்த சனிக்கிழமை, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற முழு பாரம்பரியம் நிறைந்த நிகழ்ச்சியில் 17-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் அரியணை அமர்ந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் உயர்மட்ட தலைவராக, மலேசிய மக்களைப் பாதுகாக்கும் கடப்பாட்டை ஏற்பதை உலகிற்கு காட்டும் நிகழ்ச்சியாக இந்த அரியணை அமரும் விழா, பாலாய்ருங் ஶ்ரீ இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)