பொது

நூர் ஃபாரா கர்தினி கொலை வழக்கு; சந்தேக நபர் மீது நாளை குற்றச்சாட்டு

25/07/2024 05:43 PM

சிலாங்கூர், 25 ஜூலை (பெர்னாமா) -- நூர் ஃபாரா கர்தினி அப்துல்லா கொலை வழக்கின் சந்தேக நபர் கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நாளை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

கொலை செய்த காரணத்திற்காக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ், 26 வயதுடைய அச்சந்தேக நபர் மீது குற்றஞ்சாட்டப்படவிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

அக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு விட்டதோடு, சந்தேக நபருக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதற்கான உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

25 வயதுடைய நூர் ஃபாரா கர்தினி, கடந்த ஜூலை 10ஆம் தேதி காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட வேளையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரின் சடலம் உலு சிலாங்கூரில் உள்ள செம்பணை தோட்டம் ஒன்றில் மாலை மணி சுமார் 6க்கு கண்டெடுக்கப்பட்டது.

போலீஸ் உறுப்பினருமான சந்தேக நபர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)