பொது

சபா கிழக்குக்கரை பாதுகாப்பு மண்டலம் தொடர்பில் விளக்கமளிப்பு

26/07/2024 04:05 PM

தாவாவ், 26 ஜூலை (பெர்னாமா) -- சபா கிழக்குக்கரை பாதுகாப்பு மண்டலம், ESSZone தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் அங்கு பாதுகாப்பு கண்காணிப்யை நேரில் காண வந்த 10 அந்நிய நாட்டுப் பிரதிநிதிகளை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்றிரவு வரவேற்றார்.

சபா கிழக்குக்கரைப் பகுதியில் பாதுகாப்பு அம்சம் குறித்த அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

''இத்திட்டத்தின் மூலமாக நீங்கள் பாதுகாப்பான சூழ்நிலையை அனுபவிக்க முடியும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அதேவேளையில், இயற்கைக்காட்சியின் அழகை ரசித்து, இந்த அழகான நினைவுகளை உங்கள் நாட்டிற்கு மீட்டெடுக்கவும், உங்கள் சக நாட்டினரையும் அதை அனுபவிக்க அழைப்பு விடுக்கவும் இந்த சிறப்பான சூழ்நிலை அமைந்துள்ளது,'' என்றார் அவர். 

சபாவில் பாதுகாப்பு பிரச்சனைகளைக் களைய சபா கிழக்குக்கரை சிறப்புப் பாதுகாப்புப் பகுதி, ESSCom-ஐ தாம் முழுமையாக நம்புவதாகவும் சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]