புத்ராஜெயா, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உலக எண்ணெய் சந்தை விலை வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு நாளை வியாழக்கிழமை ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரையில் டீசல் விலை ஐந்து சென் குறைகிறது.
அந்த வகையில் மூன்று ரிங்கிட் 30 சென்னுக்கு விற்கப்பட்ட டீசல், தற்போது மூன்று ரிங்கிட் 25 சென்னுக்கு விற்கப்படும்.
நாட்டின் சந்தை விலையினை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும், சந்தையில் எண்ணெய் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டீசல் சில்லறை விலையை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
டீசலைத் தவிர்த்து இவ்வாரத்தில் மற்ற எரிபொருளின் விலையில் மாற்றமில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)