பொது

பிரதமர் அன்வாருக்கு புது டெல்லியில் அதிகாரப்பூர்வ வரவேற்பு

20/08/2024 03:55 PM

புது டெல்லி, 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மூன்று நாள்கள் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு புது டெல்லியில் உள்ள அதிபர் மாளிகை, ராஷ்டிரபத்தி பவனில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

நேற்றிரவு இந்திய சென்றடைந்த அன்வார் அதிபர் மாளிக்கைக்கு இன்று காலை மணி ஒன்பதுக்கு வந்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றார்.

இரு நாடுகளின் தேசிய பண் ஒலிக்கப்பட்டதும் இரு தலைவர்களும் தங்களின் பேராளர்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ராஜ் காட் நினைவகத்தில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு அன்வார் வருகை மேற்கொண்டு மலர்வளையம் வைத்தார்.

புதுடெல்லியில், அன்வாரை, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]