செராஸ், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தியோ பெங் ஹொக்கின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் மறுஆய்வு செய்து வருகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் கருத்தையும் ஆலோசனையையும் தமது தரப்பு பெறவிருப்பதாக டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹய்லி தெரிவித்தார்.
இவ்வழக்கு விசாரணை ஆவணங்களை போலீஸ் மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆகஸ்ட் முதலாம் தேதி அறிவித்திருந்தார்.
அவ்விசாரணை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்னர், 2009-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி 30 வயதான தியோ பெங் ஹொக் சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலக கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்ததாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]