விளையாட்டு

எஃப்.ஏ. கிண்ண இறுதி ஆட்டம்; ரசிகர்களுக்கு போலீஸ் கடுமையான எச்சரிக்கை

21/08/2024 06:30 PM

கோலாலம்பூர், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சனிக்கிழமை எஃப்.ஏ. கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாடவிருக்கும் இரு அணிகளின் ரசிகர்களுக்கு போலீஸ் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஜே.டி.தி-யும் சிலாங்கூரும் மோதும் இந்த இறுதி ஆட்டத்தைக் காண சுமார் 85,000 ரசிகர்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமாட் இசா தெரிவித்தார்.

ஆகவே இவ்விளையாட்டைக் காண வரும் ரசிகர்கள் சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு கருதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,488 போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணிக்கு அமர்த்தப்படவுள்ளதாக ருஸ்டி முஹமாட் கூறினார். 
 
"கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு சினமூட்டும் செயல்களைச் செய்ய வேண்டாம். மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் அளவை மீறிச் செயல்பட வேண்டாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ருஸ்டி முஹமாட் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)