அரசியல்

'SANG SAKA BANGSA' கொடியேற்றத்துடன் தொடங்கியது அம்னோ பொதுப் பேரவை 

23/08/2024 06:07 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024ஆம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவை கோலாலம்பூர் உலக வாணிப மையம், WTCKL-இல் உள்ள பிளாசா மெர்டேக்கா வளாகத்தில், 'Sang Saka Bangsa' கொடியேற்றத்துடன் தொடக்கம் கண்டது.

அம்னோ துணை தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் மற்றும் உச்சமன்ற உறுப்பினர்களுடன், அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, காலை 8 மணிக்கு அவ்விடத்தை வந்தடைந்தார்.

அம்னோ கொடியை ஏற்றியதை அடுத்து டாக்டர் அஹ்மட் சாஹிட், 2024 பொது பேரவையை நிறைவு செய்து வைக்கும் தலைவரின் கொள்கை உரையையும் ஆற்றினார்.

கடந்த புதன்கிழமை தொடங்கிய அம்னோ பொது பேரவையில் மொத்தம் 6,433 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)