கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனுரா குமார திசநாயகேக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.
இன்று, பிரதமரின் அனைத்து சமூகவலைத்தள கணக்குகளின் வழியாக அந்த வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டது.
இலங்கையுடனான நட்புறவைப் புதுப்பித்து இரு நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு மலேசியா காத்திருப்பதாக பிரதமர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
55 வயதுடைய திசநாயகே தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்து இன்று அதிபராக பதவியேற்றார்.
அரசியலில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை 13 லட்சம் வாக்குகளில் திசநாயகே தோற்கடித்தார்.
இலங்கையின் பத்தாவது அதிபராக திசநாயகே இன்று பதவியேற்றார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]