குளுவாங், 24 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று நடந்த மக்கோத்த சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பில் மாலை மணி ஐந்து வரை 95.45 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
போலீஸ், இராணுவத்தினர் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என மொத்தம் 4,437 பேர் இன்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாக தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் தலைவர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார்.
இன்று காலை மணி எட்டுக்கு தொடங்கிய இந்த முன்கூட்டியே வாக்குப்பதிவு மாலை மணி ஐந்துக்கு நிறைவு பெற்றது.
மூன்று வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்புச் செயல்முறை சுமூகமாக நடைபெற்றது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]