பொது

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியர்கள் நலன் தொடர்பான விவகாரங்கள் விவாதம்

25/09/2024 06:37 PM

புத்ராஜெயா, 25 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய சமுதாயத்தின் நலன் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

நேற்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்திய சமுதாய தலைவர்கள் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அவை விவாதிக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அதனைத் தவிர்த்து, இந்திய கிராமத் தலைவர்கள் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டதாகவும், வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்ற அமைச்சர், ஙா கோர் மிங் கூடிய விரைவில் அறிக்கை வெளியிடுவார் என்று ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)