பொது

போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்து

05/10/2024 05:55 PM

ஜப்லானிக்கா, 05 அக்டோபர் (பெர்னாமா) -- போஸ்னியா ஹெர்சகோவினாவின் ஜப்லானிக்கா மாநகரத்தில் ஏற்பட்டிருக்கும் பெருமழை மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் அமலாக்கத் தரப்பின் அண்மைய அறிவிப்புகளில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், இதுவரை மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

இப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் மலேசியா தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது.

மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், Sarajevo பகுதியில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் விஸ்மா புத்ரா தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து அண்மைய தகவல்களை வழங்கி வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

உதவி தேவைப்படும் அங்குள்ள மலேசியர்கள் +387 33 201 578 எனும் தொலைபேசி எண் மற்றும் mwsarajevo@kln.gov.my எனும் மின்னஞ்சல் முகவரியில் மலேசிய தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]