பொது

கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; இருவர் காயம்

12/10/2024 06:43 PM

மலாக்கா, 12 அக்டோபர் (பெர்னாமா) -- மலாக்கா, ஜாலான் புக்கிட் செஞ்ஜுவாங்கில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் அந்நிய தொழிலாளர் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.

இரவு மணி 9.55 அளவில் அந்த ஆடவர் இடிபாடுகளுக்குள் காணப்பட்ட போதிலும், நள்ளிரவு மணி 12.16 அளவில் அங்கிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக கிறிஸ்டபர் பாதிட் கூறினார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து மாலை மணி 6.18-க்கு தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு 81 உறுப்பினர்கள் சென்றதாக மலாக்கா மாநில தீயணைப்பு & மீட்புத் துறை துணை இயக்குநர் R Saiful Iswandy R Hassan தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் நுழைவதற்கு முன்பு கட்டிடத்தின் இடிபாடுகள் மற்றும் கட்டிடத்தின் மீதமுள்ள கான்கிரீட், கல் மற்றும் இரும்புக் குவியல்கள் அகற்றப்பட வேண்டும். அது சவால். என்றார் அவர்.

உயிர் பிழைத்த பாகிஸ்தானை சேர்ந்த 32 வயது சுபாயிர் அமிட் மற்றும் 49 வயது அப்பாஸ் குலாம் ஆகியோருக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் தலை உட்பட உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவர்கள் இருவரும் முறையே மாலை மணி 6.40 மற்றும் இரவு மணி 8.45 அளவில் காப்பாற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)