பொது

மலேசியாவுக்கு வருகைப் புரிந்திருக்கும் எத்தியோப்பிய பிரதமர்

25/10/2024 06:36 PM

புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபிய் அஹ்மாட் அலி இன்று தொடங்கி இரு நாள்களுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார்.

டாக்டர் அபிய் மற்றும் அவரின் துணைவியார் பயணித்த விமானம், இன்று காலை மணி 8.30-க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

எத்தியோப்பிய பிரதமரை, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நாசிர் வரவேற்றார்.

விமான நிலையம் வந்தடைந்த டாக்டர் அபிய் அஹ்மாட் அலிக்கு இராணுவ வரவேற்பு வழங்கப்பட்டது.

டாக்டர் அபியின் வருகை, மலேசியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

நாளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனான இரு தரப்பு சந்திப்பில் அவர் கலந்து கொள்வார்.

வர்த்தகம், முதலீடு, விவசாயம், ஹலால் தொழில்துறை, சுகாதாரம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்து, இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)