உலகம்

கென்யா: பேருந்து விபத்து - 11 மாணவர்கள் பலி

19/03/2024 08:20 PM

நைரோபி, 19 மார்ச் (பெர்னாமா) -- கனமழையின் போது நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரக் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கென்யா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான அப்பேருந்தில் பயணித்த 11 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் 42 பேர் காயமடைந்தனர்.

தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுங்குவில் உள்ளூர் நேரப்படி மாலை 5.50 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது. 

மொம்பாசா நகருக்குச் சென்று கொண்டிருந்த கென்யா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கினர்.

பத்து பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் போலீஸ் தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502