ஈப்போ, 23 ஏப்ரல் (பெர்னாமா) -- அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் பலியான 10 உறுப்பினர்களின் சடலங்களும் இன்று மாலை ஆறு மணிக்கு ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அடக்கம் செய்வதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சடலங்களைக் கோருவதற்கு முன்னதாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அவர்களின் சடலங்களை மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இன் நான்கு வாகனங்களிலும் அரசு சார்பற்ற இயக்கங்களின் வாகனங்களிலும் கொண்டு செல்லப்பட்டன.
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் மாலை நான்கு மணியிலிருந்தே காத்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]