ஹனோய், 30 ஜூலை (பெர்னாமா) -- வியட்நாமில் உள்ள ஹா லோங் எனும் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 23 முதல் 47 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
இன்று அதிகாலை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகத் தேடல் மற்றும் மீட்புக் குழு தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்த போது கனமழை பெய்ததாகக் கூறப்படுகிறது.
கனமழையால் மேலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியட்நாமின் வடபகுதியில் சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)