விளையாட்டு

நெதர்லாந்து டச் லீக் கிண்ணம்; 25-வது முறையாக கைப்பற்றியது பி.எஸ்.வி எய்ந்டோவன்

07/05/2024 08:23 PM

நெதர்லாந்து, 07 மே (பெர்னாமா) -- நெதர்லாந்து, டச் லீக் கிண்ணத்தை வரலாற்றில் 25-வது முறையாக கைப்பற்றி பி.எஸ்.வி எய்ந்டோவன் கிளப் சாதனை படைத்துள்ளது. 

கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பார்ட்டா ரொட்டர்டம் கிளப்பை 4-2 என்ற கோல்களில் பி.எஸ்.வி எய்ந்டோவன் தோற்கடித்த நிலையில் இச்சாதனையைப் புரிந்திருக்கின்றது. 

முதல் பாதியில் இரு கோல்களைப் போட்ட எய்ந்டோவன் இரண்டாம் பாதியின் 67 மற்றும் 78-வது நிமிடங்களில் எஞ்சிய இரு கோல்களை அடித்தது.  

எய்ந்டோவனின் அரங்கில் விளையாடிய ஸ்பார்ட்டா அதன் இரு கோல்களை முதல் பாதியில் போட்டது. 

இப்பருவத்தின் 32 ஆட்டங்களில்  87 புள்ளிகளோடு பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் அந்த கிளப் தொர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வி காணாத நிலையைத் தற்காத்துக் கொண்டுள்ளது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]