பொது

மாமன்னரின் அரியணை அமரும் சடங்கில் கலந்து கொள்ள புருணை சுல்தான் மலேசியா வருகை

19/07/2024 05:12 PM

சுபாங், 19 ஜூலை (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமரும் சடங்கில் கலந்து கொள்வதற்கு புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா மலேசியா வந்துள்ளார்.

அவர் பயணித்த விமானம் இன்று காலை மணி 11.55-க்கு சுபாங் தி.யு.டி.எம் விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுல்தான் ஹசனல் போல்கியாவை ஜோகூர் அரச குடும்பத்தினர் வரவேற்றனர்.

மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்து, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசானும் கலந்து கொண்டார்.

சுல்தான் ஹசனல் போல்கியாவுக்கு அரச இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வரவேற்பும் வழங்கப்பட்டது.

தமது அரியணை அமரும் சடங்கிற்கான அழைப்பிதழை சுல்தான் ஹசனல் போல்கியாவிடம் நேரடியாக வழங்க, கடந்த ஜூன் 25-ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் பண்டார் ஶ்ரீ பகாவானுக்கு சென்றிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)