உலகம்

வடமேற்கு சீனாவில் பாலம் உடைந்தது - 11 பேர் பலி

20/07/2024 06:14 PM

ஷான்சி, 20 ஜூலை (பெர்னாமா) -- சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தினால் பாலம் ஒன்று சரிந்ததில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
    
வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், பயன்பாட்டில் இருந்த இந்த பாலம் சேதமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஐந்து வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.

மேலும் 20 வாகனங்களுடன் 30 பேரை காணவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)