உலகம்

ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

20/07/2024 06:25 PM

கலிபோர்னியா, 20 ஜூலை (பெர்னாமா) -- தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எஞ்சலஆ தேசிய வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீ வேகமாக பரவி வருவதால், அந்த வனப் பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை அருகே உள்ள காடுகளில் தீப் பரவி வருவதால், சாலையில் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக செல்லும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத் தீச் சம்பவத்தினால் ஏற்பட்டிக்கும் சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)