விளையாட்டு

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் அண்டி முர்ரே

23/07/2024 06:16 PM

பாரிஸ், 23 ஜூலை (பெர்னாமா) -- ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பிறகு தாம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக ஏண்டி முர்ரே (ANDY MURRAY) அறிவித்திருக்கிறார்.

ஒலிம்பிக் போட்டியே தாம் கலந்து கொள்ளவிருக்கும் இறுதிப் போட்டி என்று, மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டதை வென்றிருக்கும் முர்ரே தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பிரிட்டனைச் சேர்ந்த முர்ரே பாரிஸ் சென்று சேர்ந்துள்ளார்.

2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்று முர்ரே பிரிட்டனுக்குப் பெருமைச் சேர்த்தார்.

அதன் பின்னர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமது இரண்டாவது தங்கத்தையும் அவர் வென்றார்.  

இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் விளையாட்டில் இரு முறை தங்கப் பதக்கம் வென்றிருக்கும் ஒரே ஆண் விளையாட்டாளர் என்ற சாதனையையும் முர்ரே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)